காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் இரவு நேர மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இரவு நேரங்களில் மழை பெய்யும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். மேற்கு மத்திய வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று காலையில் இருந்து பகல் 1 மணி வரை சுள் என்று வெயில் நன்றாக அடித்தது. மாலை 4 மணிக்கு மேல் வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. திடீர் என்று மாலை 5 மணி முதல் அரைமணிநேரம் எழும்பூர், புரசைவாக்கம் ஆகிய இடங்களில் மழை பெய்தது.

சிறிது நேரம் பெய்த பலத்த மழையின் காரணமாக ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதனால் மழை பெய்த பகுதிகளில் வெப்பம் சற்று தணிந்து காணப்பட்டது.
நள்ளிரவில் சென்னையின் நகரப்பகுதிகளிலும், தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டியது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் பெய்துள்ளதாக வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,
மேற்கு மத்திய வங்கக் கடலில், ஆந்திர கடலோரப் பகுதியில், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இது உருவான பின்னரே அதன் நகர்வைப் பொருத்து, அந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்துக்கான மழை வாய்ப்புகள் குறித்து தெரியவரும்.
இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும என்றும் கூறினார்.
தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று வரை தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை இயல்பாக பெய்துள்ளது. குறைவாகவோ, கூடுதலாகவோ பெய்யவில்லை. அடுத்த 24 மணிநேரத்தில் ஆந்திரா அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது.
தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் 11ம் தேதி சில இடங்களில் மழை பெய்யும், 12ம் தேதி அனேக இடங்களில் மழை பெய்யும். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திராவில் தான் அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
இதனிடையே சமூகவலைத்தளத்தில் மழை எச்சரிக்கை விடுக்கும் தமிழ்நாடு வெதர்மேனும் மழை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

-
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக?












Click it and Unblock the Notifications