4 நாட்களுக்கு வெயில் வறுத்தெடுக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில்,

கடந்த சில நாட்களாக கடல் காற்று வலுவிழந்து நேரம் கழித்து வீசுவதால் வெப்பம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும்.
அதற்காக வறண்ட வானிலை மட்டுமே நிலவும் என்றும் கூற முடியாது. ஆனால் மழை மட்டும் பெய்யாது. அதன் பிறகே மழை பெய்யுமா இல்லை வெயில் தொடருமா என்பது தெரியும் என்றார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் சிவகங்கை, கூடலூர் பஜாரில் தலா 2 செ.மீ. மழையும், காட்டுமன்னார் கோவில், தம்மம்பட்டி, பரங்கிப்பேட்டை, ஆனைக்காரன் சத்திரம், தேவலா, ஏற்காடு, ஜெயங்கொண்டம், ஓமலூர், சிதம்பரம், சீர்காழியில் தலா 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications