மத்திய அரசின் அனைத்து தேர்வுகளை எதிர்கொள்ளும் புதிய கல்வி கொள்கை- செங்கோட்டையன்
தமிழகத்தில் இம்மாத இறுதிக்குள் புதிய கல்வி கொள்கை கொண்டுவரப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை: மத்திய அரசின் அனைத்து தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் புதிய கல்வி கொள்கை இம்மாத இறுதிக்குள் கொண்டு வரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தமிழகத்திலுள்ள மாணவர்கள் திறமையானவரகளாக இருந்தாலும் அவர்களின் பாடத்திட்டம் தரமானதாக இல்லை என்பதே பலரின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு உயர்கல்வியான மருத்துவ படிப்புக்கு இந்த ஆண்டு முதல் நீட் தேர்வை கட்டாயமாக்கியுள்ளது. இதே போன்ற அடுத்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று சொல்லப்படுகிறது.
இதற்காக மாணவர்கள் தயாராகும் வகையில் பாடத்திட்டத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தை மாற்றி அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதுதொடர்பாக 22.5.2017 அன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், புதிய பாடத்திட்டத்தை உருவாக்கும் பணியையும், பாடப்புத்தகங்களைத் தயாரித்து வடிவமைக்கும் பணியையும் மேற்கொள்ளவுள்ளது.
அடுத்த கல்வியாண்டான 2018 - 2019ல் 1,6,9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் இம்மாத இறுதிக்குள் புதிய கல்வி கொள்கை கொண்டுவரப்படும் என்றார். மத்திய அரசின் அனைத்து தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் புதிய கல்வி கொள்கை இம்மாத இறுதிக்குள் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications