பள்ளிகள் திறக்கும் போதே பாடப்புத்தகம்! தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை! லியோனி திட்டவட்டம்!
சென்னை: பள்ளிகள் திறக்கும் போதே மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம் செய்யப்படும் என்றும் தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுகளில் பள்ளிகள் திறக்கப்பட்டு சில நாட்களுக்கு பிறகே புத்தகங்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்தாண்டு முன்கூட்டியே எல்லா ஏற்பாடுகளும் பக்காவாக செய்யப்பட்டுள்ளன.

ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படவிருந்த பள்ளிகள் கோடை வெயில் காரணமாக ஜூன் 7ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஜூன் 7ஆம் தேதியன்று 2023-2024 கல்வியாண்டுக்கான புத்தகங்களை மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குவார் என்ற தகவலையும் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.
தற்போது முழுக்க முழுக்க இந்தப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் திண்டுக்கல் லியோனி, கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் வரை பள்ளிகள் திறக்கப்படும் நாளில் புத்தகம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அமைச்சர் அன்பில் மகேஷும் இது தொடர்பான ஆலோசனைகளை தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனிக்கு வழங்கி வருகிறார்.
இதனால் மாணவர்களே, பெற்றோர்களே புத்தகம் விரைவாக கிடைக்குமா என்ற ஐயத்தை விட்டுவிட்டு புதிய கல்வியாண்டை மகிழ்ச்சியாக எதிர்கொள்ள ஆயத்தமாகுங்கள்.












Click it and Unblock the Notifications