2047க்குள் தமிழகம் தனிநாடாகும்... மத்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை

2047ஆம் ஆண்டுக்குள் தமிழகம் தனி நாடாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2047ஆம் ஆண்டுக்குள் தமிழகம் தனி நாடாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மோடியின் வருகையை கண்டித்து சென்னை சின்னமலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது சென்னை வந்த மோடிக்கு எதிராக அவர் முழக்கமிட்டார்.

Tamil Nadu will be a separate country in 2047: Vaiko

மேலும் மோடி வருகையை கண்டித்து கறுப்பு நிற பலுன்களையும் அவர் பறக்கவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

பாஜகவின் இந்த கனவு பலிக்காது என்றும் அவர் கூறினார். மேலும் நாட்டின் 100 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது பல மாநிலங்கள் தனி நாடாக பிரிந்திருக்கும் என்றும் வைகோ தெரிவித்தார்.

அந்த தனி நாடுகளில் தமிழ்நாடும் ஒன்றாக இருக்கும் என்றும் வைகோ தெரிவித்தார். இவ்வாறு பேசிய வைகோ தனது இந்த பேச்சுக்காக தன்மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யட்டும் என்றும் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+