Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கட்டிப்பிடித்தார்.. ஆபாச படங்களை காண்பித்தார்.. ஐஜி மீது பெண் எஸ்பி புகார்.. திடுக் தகவல்கள்!

லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி தனது அறையில்வைத்து ஆபாச படங்களை காட்டியதாக பெண் எஸ்பி அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கட்டியணைக்க முயற்சித்த ஐஜி...தமிழக பெண் எஸ்பி பகீர் புகார்!- வீடியோ

    சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி தனது அறையில்வைத்து ஆபாச படங்களை காட்டியதாக பெண் எஸ்பி அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி வரும் பெண் எஸ்பி அத்துறையின் ஐஜி மீது பாலியல் புகாரை அளித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக டிஜிபி மற்றும் தலைமை செயலாளருக்கு அந்த பெண் எஸ்பி புகார் கடிதத்தையும் அனுப்பியுள்ளார்.

    அதில் அவர் தெரிவித்திருக்கும் தகவல்கள் பரபரப்பை கிளப்பியுள்ளன. அதாவது, தான் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியில் சேர்ந்தது முதலே ஐ.ஜி தன்னிடம் தவறான நோக்கத்திலேயே நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    கட்டிப்பிடித்தார்

    கட்டிப்பிடித்தார்

    சில சமயங்களில் ஆலோசனை என அழைத்து அவருடையை அறையில் வைத்து தன்னை கட்டிப்பிடித்து தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும் அந்த பெண் எஸ்பி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    ஆபாச எஸ்எம்எஸ்கள்

    ஆபாச எஸ்எம்எஸ்கள்

    பலமுறை நான் தவிர்த்தும் தன்னை மிரட்டி தனக்கு ஐஜி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக அவர் கூறியுள்ளார். வேலை நேரத்தில் தனக்கு ஆபாசமான எஸ்.எம்.எஸ்கள் அனுப்புவது, ஆபாச படங்கள் அனுப்புவது என ஐஜியின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் பெண் எஸ்பி தெரிவித்துள்ளார்.

    ஆபாச படங்கள்

    ஆபாச படங்கள்

    பல முறை அவருடைய அறையில் வைத்து ஆபாச படங்களை காட்டி பாலியல் ரீதியாக தன்னிடம் தவறாக நடக்க முயன்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 7 மாதங்களாக அவர் இதுபோன்று தனக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும் பெண் எஸ்பி தெரிவித்துள்ளார்.

    நாசமாக்கி விடுவேன்

    நாசமாக்கி விடுவேன்

    இது குறித்து வெளியில் கூறினாலோ அல்லது புகார் அளித்தாலோ ஆண்டுதோறும் வழங்கப்படும் நன்னடத்தை அறிக்கையில் மோசமான வார்த்தைகளை சேர்த்து எதிர்காலத்தை நாசமாக்கிவிடுவேன் என அந்த அதிகாரி மிரட்டியதாகவும் பெண் எஸ்.பி தெரிவித்துள்ளார்.

    விசாரணைக்குழு அமைப்பு

    விசாரணைக்குழு அமைப்பு

    இந்த புகார் கடிதம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து ஐஜி மீதான புகாரை விசாரிக்க டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். ஏ.டி.ஜி.பிக்கள் சீமா அகர்வால், சு.அருணாச்சலம் மற்றும் டி.ஐ.ஜி தேன்மொழி ஆகியோர் அடங்கிய குழுவை டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் அமைத்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+