#20தமிழர்கள்கொலையைகண்டிப்போம்.. ஆந்திர என்கவுண்டரை டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் செய்த தமிழர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆந்திர போலீசாரால் 20 தமிழர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க டிவிட்டரில் தமிழ் இணைய பயனாளர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

சித்தூர் வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக கூறி, 20 தமிழ் கூலித் தொழிலாளர்களை ஈவு இரக்கமின்றி சுட்டு பொசுக்கியது ஆந்திர காவல்துறை. இந்த சம்பவத்தில், மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், போலி என்கவுண்டர் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கான ஆதாரங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன.

Tamil netizens start to trend the word related to Andhra's encounter

இந்நிலையில், உணர்வுள்ள, தமிழ் டிவிட்டர் பயனாளிகள், இந்த பிரச்சினையை தேசிய அளவில் கொண்டு செல்ல முடிவு செய்து #20தமிழர்கொலையைகண்டிப்போம் என்ற பெயரில் ஹேஸ்டேக் உருவாக்கியுள்ளனர்.

இந்த ஹேஸ்டேக்கில், ஆந்திர என்கவுண்டர் குறித்த சந்தேகங்களையும், கண்டனங்களையும் பதிவு செய்துவருகின்றனர் தமிழ் நெட்டிசன்கள். இந்த ஹேஸ்டேக் தற்போது இந்திய அளவில் டிரெண்ட் ஆகிக் கொண்டிருப்பதால், இந்தியாவில் டிவிட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும், அது கண்ணில்படும், பாலிவுட் பிரபலங்கள் முதல், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் வரையில், இந்த டிரெண்ட் கண்ணில்படும்.

அதிகார வர்க்கம், செல்வாக்குமிக்கவர்களின் கவனத்தை ஈர்க்க இந்த ஹேஸ்டேக் பயன்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+