6 வயது குழந்தையை கொடூரமாக அடித்த பெண்.. அதிரடியாக செயல்பட்டு கைது செய்த மலேசியா போலீஸ்!
மலேசியாவில் குழந்தையை கொடூரமாக அடித்த பெண்ணை போலீசார் அதிரடியாக செயல்பட்டு உடனடியாக கைது செய்தனர்.
கோலாலம்பூர் : 6 வயது குழந்தையை பெண் ஒருவர் ஸ்கேலால் கடுமையாக அடித்து துன்புறுத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து அந்தப் பெண்ணை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
உணவை சரிவர சாப்பிடாததாலும், கீழே சாப்பாட்டை சிந்தியதாலும் 6 வயது குழந்தையை பெண் ஒருவர் மூர்க்கத்தனமாக அடித்துள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. குழந்தையை ஏன் இப்படி அடிக்கிறீர்கள் என்று அக்கம் பக்கத்தினர் கேட்டதற்கு பலமாக அடிக்கவே கண்டித்தேன் அவ்வளவு தான் என்று அந்தப் பெண் கூறியுள்ளார்.

மேலும் தான் அந்தக் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதாகவும் பெண் கூறியுள்ளார். எனினும் நெஞ்சை பதற வைக்கும் இந்த வீடியோ காட்சிகள் தீயாக பரவியதால், அந்தப் பெண்ணின் விலாசத்தை கண்டுபிடித்து நள்ளிரவே கைது செய்துள்ளனர் போலீசார்.
சாப்பாட்டை சிந்தியதற்காக குழந்தையை இறக்கமின்றி அடிக்கும் பெண்.. கொலைநடுங்க வைக்கும் வைரல் வீடியோ! https://t.co/isEnSICc8d pic.twitter.com/xsUeGmBOFf
— Oneindia Tamil (@thatsTamil) June 6, 2017
மலேசியாவின் புசாங்கில் உள்ள தமன் புச்சாங் பர்டானாவில் தான் இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. தமிழில் குழந்தையை அந்தப் பெண் திட்டுகிறார், எனவே அவர் தமிழகத்தில் இருந்து அங்கு சென்று பணியாற்றுபவரா அல்லது அங்கேயே வசித்து வருகிறாரா என்ற விவரங்கள் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications