திமுக தோல்விக்கு மோடி மீது பழி சுமத்துவதா? கருணாநிதிக்கு தமிழிசை கண்டனம்
சென்னை: சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடையும் முன்பே ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததுதான் திமுகவின் தோல்விக்கு காரணம் என அக்கட்சித் தலைவர் கருணாநிதி கூறியுள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தேர்தல் பரப்புரையை முடித்து ஆட்சி அமைக்க முடியாத ஆத்திரத்தில் ஒரு பொய் உரையை கருணாநிதி பிறந்தநாள் உரையாக ஆற்றி இருப்பது கண்டிக்கத்தக்கது. ஆட்சி அமைக்க முடியவில்லை என்ற உடன் வலுவான எதிர்க்கட்சி அந்தஸ்தை கொடுத்த மக்கள் ஆடுகளாக மாறி விடுவார்கள். தங்கள் ஆட்டத்துக்கு ஓட்டு போட்டால் நல்ல ஆட்கள். இல்லை என்றால் ஆடுகளா?. மக்களுக்காக இன்று கருணாநிதி இல்லை, கருணாநிதிக்காக மக்கள் இருக்க வேண்டும் என்பதே இன்றைய அவரது அரசியல் பார்வை. கசாப்பு கடைக்காரனை நோக்கி செல்லும் ஆடுகள் என்கிறார் மக்களை பார்த்து.
{photo-feature}












Click it and Unblock the Notifications