கார் விபத்தில் சிக்கிய பாஜக மாநில பொதுச்செயலாளர்... நேரில் சென்று தமிழிசை, இல.கணேசன் ஆறுதல்
திருச்சி: விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக மாநில பொதுச்செயலாளர் மோகன்ராஜுலுவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே நேற்று புழுதிப்பட்டியில், பாஜக மாநில பொதுச்செயலாளர் மோகன்ராஜூலுவின் கார் மீது லாரி ஒன்று மோதியது. இதில், பலத்த காயமடைந்த மோகன்ராஜூலு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காவேரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிப்பட்டுள்ளார்.

அவரோடு காரில் வந்த துணைதலைவர் சுரேந்திரன், பாதுகாப்பு அலுவலர் பாண்டியன் டிரைவர் விவேக் ஆகியோரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கே நேரில் சென்று மாநில தலைவர் தமிழிசை ஆறுதல் கூறினர். அப்போது பாஜக மூத்த தலைவர் இல.கணேசனும் உடனிருந்தார்.
விபத்தில் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து அவர்களுக்கு தமிழிசை ஆறுதல் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திருநாரையூர் என்ற இடத்தில் சாலை விபத்தில் சிக்கிய பாமக ஆதரவாளரையும், அவரது மனைவியையும் காப்பாற்றி தனது வாகனத்திலேயே கொண்டு சென்று ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தது நினைவு கூரத்தக்கது.












Click it and Unblock the Notifications