நடராஜனுக்கு காட்டிய அவசரத்தை ஏன் ஜெயலலிதாவுக்கு காட்டல? - தமிழிசை கேள்வி: வீடியோ
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு செய்யப்பட்ட உறுப்புமாற்று அறுவை சிகிச்சையில் மோசடி நடந்ததாகக் தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video

திருச்சி: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எம்.நடராஜனுக்கு செய்யப்பட்ட உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சையில் பல மோசடிகள் நடந்துள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார்.
கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் செயலிழந்த காரணத்தால் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் அங்கிருந்து குளோபல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

குளோபல் மருத்துவமனையில் அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் நலமாக இருக்கிறார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மோசடி நடைபெற்றுள்ளதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, தஞ்சாவூரில் மூளைச்சாவடநித ஒருவருடைய உறுப்புகள் தானம் கொடுக்கபப்ட்டுள்ளாது. ஆனால், உறுப்புமாற்று விதிகள் பல மீறப்பட்டிருக்கிறது. இது பல சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.
இந்த சந்தேகங்கள் குறித்து விசாரணை செய்யபப்ட வேண்டும். இதனால் ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிய உறுப்புகள் தொடர்ந்து மறுக்கப்படுகிறது. எந்த மருத்துவமனையில் ஒருவர் மூளைச் சாவு அடைகிறாரோ அந்த மருத்துவமனைக்குத்தான் அவரது உறுப்புகள் சொந்தம் என்பது விதி.
ஆனால் தஞ்சாவூரில் இறந்த ஒரு ஏழை இளைஞனின் உடல் எப்படி சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது? அதற்கான செலவை யார் ஏற்றுக்கொண்டது? என தீர விசாரிக்க வேண்டும். இப்படியான வியாபார நோக்கத்துடன் செயல்படும் தனியார் மருத்துவமனைகள் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்.
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரை அவரது பெற்றோரை ஏமாற்றி எதற்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வர வேண்டும். இந்த அவசரத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏன் காட்டவில்லை என தமிழிசை கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications