மெரினாவில் ஸ்டாலின் போராட்டம் நடத்திதான் பார்க்கட்டுமே - தமிழிசை சவால்- வீடியோ
பசுவதை தடுப்பு சட்டத்தை எதிர்த்து ஸ்டாலின் மெரினாவில் போராட்டம் நடத்தினால் அதன்பிறகு நடப்பதைப் பாருங்கள் என பாஜக தலைவர் தமிழிசை சவால் விட்டுள்ளார்.
சென்னை: மெரினா கடற்கரையில் மு.க.ஸ்டாலின் மாட்டிறைச்சி தடையை எதிர்த்து போராட்டம் நடத்தட்டும். அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பாருங்கள் என பாஜக தலைவர் தமிழிசை சவால் விட்டுள்ளார்.
மாட்டிறைச்சி தடையை மத்திய அரசு திரும்பப் பெற்றுக்கொள்ளவில்லை எனில், மெரினா கடற்கரையில் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதில் அளிக்கையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மெரினாவில் போராட்டம் நடத்தட்டும். அதன்பிறகு என்ன நடக்கிறது என்று பாருங்கள் என சவால் விடும் வகையில் கூறியுள்ளார்.
மேலும், ஸ்டாலின் பசுவதை சட்டத்தை முழுக்க புரிந்துகொண்டுதான் பேசுகிறாரா அல்லது புரியாதது போல் பேசுகிறாரா என்று புரியவில்லை. பசுவதை தடுப்பு சட்டத்தை இங்கு அரசியலாக்குகிறார்கள் என்று கூறினார். மேலும் மோடி அரசின் மூன்று வருட சாதனைகள் குறித்து ஸ்டாலின் என்னுடன் விவாதிக்கத் தயாரா என்றும் கேள்வி கேட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்களுக்குள் மோதல் நடந்துள்ளது. அதை தேவையில்லாமல் அரசியல் ஆக்குகிறார்கள் என தமிழிசை கூறியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த மாணவர் சூரஜை மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சந்தித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications