For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்டப் பஞ்சாயத்து செய்து இடத்தை வளைத்துப் போடுபவர் திருமாவளவன்: தமிழிசை பயங்கர 'அட்டாக்’

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை கட்டப் பஞ்சாயத்து செய்பவர் என தமிழிசை சவுந்தரராஜன் சாடியிருக்கிறார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கட்டப் பஞ்சாயத்து செய்து இடத்தை வளைத்துப் போடுகிறவர் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக சாடியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய்யை வளைத்துப் போடும் வகையில் மெர்சல் திரைப்படத்தை முன்வைத்து மிரட்டுகிறது பாஜக என குற்றம்சாட்டியிருந்தார் திருமாவளவன். இதற்கு பதிலளித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Tamilisai slams Thirumavalavan over Mersal Issue

திருமாவளவனின் அனுபவம் பேசுகிறது. ஏதாவது ஒரு இடத்தை வளைத்துப் போடனும்னா முதலில் போய் மிரட்டுவார்.. யாரையாவது வளைச்சுப் போடனும்னா முதல்ல மிரட்டுவாரு....

முதலில் அவர்கள் எப்படி பஞ்சாயத்து, கட்டப்பஞ்சாயத்து.. இன்றைக்கு அவர்கள் அலுவலகம் இருக்கிற இடங்களில் இருந்து எல்லாவற்றையுமே வளைத்துப் போடுகிறவர்கள்... அப்படியெல்லாம் வளைத்துப் போடுகிறவர்கள் நாங்கள் விஜய்யை வளைத்துப் போட முயற்சி செய்வதாக நினைக்கிறார்கள்.

அப்படியெல்லாம் இல்லை... அப்படி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. விடுதலை சிறுத்தைகளுக்கு வேண்டுமானால் அப்படிப்பட்ட அவசியம் இருக்கும்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

English summary
TN BJP President Tamilisai Soundrarajan slammed VCK leader Thol. Thirumavalavan on Mersal issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X