நிறுத்துங்க.. அரவக்குறிச்சியில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்க.. லக்கானியிடம் புகார் கொடுத்த தமிழிசை
அரவக்குறிச்சியில் அடாவடி நடப்பதால் அங்கு வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் புகார் அளித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அரவக்குறிச்சியில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சென்னையில் சந்தித்த தமிழிசை, அவரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக முகவரை வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கவில்லை என்றும், இதை தட்டிக் கேட்டு போராட்டம் நடத்திய கட்சி வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், தமிழிசை குறிப்பிட்டிருந்தார்.

முகவர்களை அனுமதிக்காததோடு, பாஜக வேட்பாளரையும் கைது செய்து அடாவடி நடத்தியுள்ளதால், அரவக்குறிச்சி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழிசை கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications