மாவீரன் போல பேசும் இளங்கோவன் மீது மாவட்டம் தோறும் வழக்கு: தமிழிசை ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னைஜெயலலிதாவை கொச்சைப்படுத்திப் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனின் கட்சி பதவியை பறிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடியின் சந்திப்பு பற்றி கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கண்டித்து பாஜகவினர் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இளங்கோவன்

இளங்கோவன்

ஒரு தலைவர் பேசும் பேச்சா இது. அதுவும் மாவீரன் போன்று பேசுகிறார். மன்னிப்பு கேட்க மாட்டாராம். எடுப்பது வாந்தி, அப்படி இருக்கையில் வாந்தியை எப்படி உள்ளே எடுக்க முடியும். அவர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்.

சோனியா

சோனியா

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஒரு பெண் தானே. அவர் தன்னைப் போன்ற ஒரு பெண்ணை கொச்சைப்படுத்திய இளங்கோவனின் கட்சி பதவியை பறிக்க வேண்டும்.

குஷ்பு

குஷ்பு

குஷ்புவின் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பதவியையும் பறிக்க வேண்டும். இளங்கோவனின் செயலை கண்டித்து சோனியா காந்தி அறிக்கை வெளியிட வேண்டும்.

வழக்கு

வழக்கு

பெண்ணியம் பற்றி பேசுபவர்கள் எல்லாம் எங்கே சென்றுவிட்டார்கள் என கேட்கிறேன்? இளங்கோவன் சீப் விளம்பரம் தேடுகிறார். அவர் மீது மாவட்டம் தோறும் வழக்கு தொடரப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+