For Quick Alerts
For Daily Alerts
Just In
ரஜினிக்கு வழங்கப்பட்ட விருதில் அரசியல் உள்நோக்கம் இல்லை: தமிழிசை பேட்டி
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷண் விருதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 2ம் தேதி கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் பாஜக சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை செளந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷண் விருது அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல எனவும், ரஜினிகாந்த் விருதுக்கு தகுதியானவர் என்றும் தெரிவித்தார். மேலும், வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க பாஜக தயாராக உள்ளதாகவும் தமிழிசை அவர் தெரிவித்தார்.
Comments
English summary
Tamilisai Soundararajan said, There is no political motive for the award given to Rajini
Story first published: Wednesday, January 27, 2016, 1:01 [IST]