ஜெயிலுக்கு போறவங்க மத்தியில் வெயிலில் ஓட்டு கேட்கிறோம்... வெற்றி பாஜகவுக்கே - தமிழிசை பஞ்ச்
ஆர். நகர் தொகுதியில் பணத்தை வாரி இறைத்தாலும் ஆர்.கே.நகரில் வெற்றி எங்களுக்குத்தான் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை: வாக்காளர்களுக்கு பணத்தை வாரி வாரி கொடுத்தாலும் வெற்றி பாஜகவுக்குத்தான் கிடைக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகரில் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பாஜக வேட்பாளராக கரு.நாகராஜன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, தமிழக பாஜக தலைவர் தமிழிசை வாக்கு சேகரித்தார்.
காய்கறிகடைகளில் காய் வாங்கியும், பூக்கடைகளில் பூக்களை வாங்கியும் மக்களிடம் தாமரைக்கு வாக்களிக்க பிரசாரம் செய்தார்.

கரு நாகராஜன்
தோசை கடையில் தோசை சுட்டும், பூரி கடைகளில் பூரி சுட்டுக்கொடுத்தும் வாக்கு சேகரிக்கிறார் வேட்பாளர் கரு நாகராஜன். மக்கள் கூடும் இடங்களில் மக்களோடு மக்களாக கலந்து வாக்கு சேகரிக்கிறார் கரு நாகராஜன்.

தமிழிசை குற்றச்சாட்டு
செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் ஆர்.கே.நகர் தொகுதி முழுதும் பணப் பட்டுவாடா நடக்கிறது. வாக்காளர்களை வேறு தொகுதிக்கு அழைத்து பட்டுவாடா செய்கின்றனர்.

ரைமிங் பஞ்ச்
ஜெயிலுக்கு சென்றவர்கள், ஜெயிலுக்கு போக வேண்டியவர்கள் மத்தியில், நாங்கள் வெயிலில் ஓட்டு சேகரிக்கிறோம். வாக்காளர்கள், பணம் வாங்கி கொண்டு ஓட்டு அளிக்க கூடாது. அப்படியே பணம் வாங்கினாலும், பாஜகவுக்குத் தான் ஓட்டளிப்பார்கள் என்றார்.

சொன்னது பலிக்குமா?
தமிழிசை சவுந்தராஜன் கடந்த முறை ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது தேர்தல் ரத்தாகும் என்றார். இலை முடங்கும் என்றும் கூறினார். அதே போலவே நடந்தது. பலரும் அவரை ஜோதிடர் என்றே கிண்டல் செய்தனர். இந்த முறை ஜெயிலுக்கு போக வேண்டியவர்கள் மத்தியில் வெயிலில் ஓட்டு கேட்கிறோம் என்கிறார். தினகரன் மீண்டும் ஜெயிலுக்கு போய் விடுவாரோ? ஆருடம் பலிக்குமா? பார்கலாம்.












Click it and Unblock the Notifications