ஆர்கே நகர் இடைத் தேர்தல் ரத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்பு!

ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து செய்யபப்ட்டுள்ளதை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றுள்ளார். பணத்துக்கு வாக்கு எனும் பார்முலாவுக்கு ஆர்கே நகரில் முடிவு கட்டப்பட்டுள்ளது எனவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட புகார்களைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. அதிமுக (அம்மா) அணியின் வேட்பாளர் டிடிவி தினகரன் ஆதரவு அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை ஆவணங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த முடிவை தேர்தல் ஆணணயம் அறிவித்துள்ளது.

Tamilisai welcomes to RK Nagar by-poll cancel

மேலும் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட இருந்த ரூ31.91 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் 74 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்தல் ரத்து அறிவிப்பை ஜனநாயகப் படுகொலை என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றுள்ளார். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பார்முலாவுக்கு ஆர்கே நகரில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது எனவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+