மறைந்த ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: தமிழக அமைச்சரவை தீர்மானம்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி மரணம் அடைந்தார். அதையடுத்து அவரது உடல் மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் 6ஆம் தேதி மாலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மறைந்த ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கவும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications