ஆளுநர், முதல்வர் சந்திப்பு நிறைவு.. தமிழக போராட்டங்கள் குறித்து விவாதித்தனர்!
உயரதிகாரிகளுடன் தமிழக முதல்வர் பழனிச்சாமி திடீர் ஆலோசனை நடத்தி உள்ளார்.
சென்னை: தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் குறித்து ஆளுநரிடம் தமிழக முதல்வர் பழனிச்சாமி நேரில் சந்தித்து விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
தமிழகம் முழுக்க காவிரி பிரச்சனை, ஸ்டெர்லைட் பிரச்சனை, நியூட்ரினோ பிரச்சனை காரணமாக போராட்ட களமாக மாறியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இதனால் சென்னையில் உயரதிகாரிகளுடன் தமிழக முதல்வர் பழனிச்சாமி திடீர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி கலந்து கொண்டனர்.

எதிர்க்கட்சிகள் நாளை முழுஅடைப்பு போராட்டம் நடத்த உள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்றது. மக்கள் போராட்டம் குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதன்பின் தமிழக முதல்வர் பழனிச்சாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார்கள். அவருடன் துணை முதல்வர் ஓ.பி.எஸ், சட்ட அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
தற்போது தமிழக ஆளுநர், முதல்வர் சந்திப்பு நிறைவு பெற்று இருக்கிறது. இதன்பின் பேட்டி அளித்த முதல்வர் ''தமிழக போராட்டங்கள் குறித்து ஆளுநரிடம் பேசினோம். தமிழக நிலவரங்களை ஆளுநரிடம் எடுத்துரைத்தோம். எங்களது பதில்கள் அவருக்கு திருப்திகரமாக இருந்ததால் ஆளுநர் திருப்தி அடைந்தார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications