குழித்துறையில் ரயில் மறியல் போராட்டம்... முதல்வர் அவசர ஆலோசனை!
குழித்துறை ரயில் மறியல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக சென்னையில் முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
Recommended Video

சென்னை : குழித்துறையில் மீனவர்களின் ரயில் மறியல் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
ஓகி புயலில் காணாமல் போன ஆயிரக்கணக்கான மீனவர்களின் நிலை என்பதை அரசு தெளிவுபடுத்தக் கோரி குமரியில் 8 கிராம மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீரோடியில் இருந்து வல்லவிளை வரை உள்ள சுற்றுவட்டார கிராம மீனவ மக்கள், கொல்லங்கோட்டில் இருந்து குழித்துறையை நோக்கி பேரணியாக சென்றனர்.

வழிநெடுகிலும் மீனவர்கள் குடும்பத்துடன் வந்து பேரணியில் இணைந்து கொண்டனர். பேரணி இறுதியாக குழித்துறை ரயில் நிலையத்தில் நிறைவடைந்தது. அங்கு ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 மணி முதல் நள்ளிரவு வரை போராட்டம் நடைபெற்றது. பெண்கள் தண்டவாளத்திலேயே தலைவைத்து படுத்திருந்தனர். மேலும் அங்கேயே சமைத்து சாப்பிட்டும் போராட்டத்தை நடத்தினர்.
மீனவர்களின் ரயில் போராட்டத்தால் திருவனந்தபுரம் வழியாக தமிழகத்திற்கு வரும் ரயில் போக்குவரத்த பாதிக்கப்பட்டது. முன்னதாக குழித்துறையில் ரயில் மறியல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதல்வர் பழனிசாமி சென்னையில் அவசர ஆலோசனை நடத்தினார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோருடன் இந்த ஆலோசனை நடத்தப்பட்டது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications