மக்களே ஜில்லுனு ஒரு செய்தி.... தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை தொடருமாம்
தமிழகத்தில் வெப்பசலனத்தால் ஒரு சில இடங்களில் மழை தொடரும்.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் வெப்பசலனத்தால் ஒரு சில இடங்களில் மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கிவிட்டது. இதனால் கேரள எல்லையில் உள்ள தமிழக பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதன் தாக்கத்தால் மற்ற பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
வெப்பசலனத்தால் சென்னையில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. நேற்று இரவும் லேசான மழை பெய்துள்ளது. இந்நிலையில் வெப்பசலனத்தால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில் தென் தமிழக கடலில் பலத்த காற்று வீசும். தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வரை காற்று வீசும்
சில வேளைகளில் மணிக்கு 55 கி.மீ. வேகம் வரை காற்று வீச வாய்ப்பு உள்ளது என்று வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு