ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணி..இன்று தொடங்கி வைக்கிறார் ஜெயலலிதா..
சென்னை : தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவுப்படி ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக ம.தி.மு.க. சார்பில் தென்மண்டல தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அந்த மனுவில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாததால் அமளை, வேலிகாத்தான் செடிகள் படர்ந்து நீரை உறிஞ்சுகிறது. அணையில் 8 அடி ஆழம் நீர் தேங்கி நிற்க வேண்டிய இடத்தில் ஒரு அடி தண்ணீரே தேங்கி நிற்கிறது. சுமார் 20 டி.எம்.சி. தண்ணீர் கடலில் சென்று வீணாவதால், மூன்று போகம் விவசாயம் நடைபெற்ற பகுதி ஒரு போகமாக மாறிவிட்டது. குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுவிட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பருவ மழையைக் கருத்தில் கொண்டு ஜூன் 10-ஆம் தேதிக்குள் மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகம் அணையைத் தூர் வார அனுமதி வழங்க வேண்டும் என்றும், அனுமதி வழங்கத் தவறினால், ஜூன் 11-ஆம் தேதி தூர் வாரும் பணிகளை தமிழக அரசு தொடங்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது.
ஆனால் மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியும், தமிழக அரசு தூர் வாரும் பணிகளைத் தொடங்கவில்லை.
இந்நிலையில், ஜூலை 6-ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் அணையைத் தூர் வாரும் போராட்டத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.
இதனிடையே திடீர் திருப்பமாக ஸ்ரீவைகுண்டம் அணை தூர் வாரும் பணியை தமிழக அரசு இன்று தொடங்குகிறது. இப்பணியை முதலமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications