கோவையைத் தொடர்ந்து நெல்லையில் களமிறங்கும் ஆளுநர்... மக்கள் பிரதிநிதிகளை சந்திக்க ஏற்பாடு!
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு டிசம்பர் 6ல் வருகை தரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மக்கள் பிரதிநிதிகளை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி : திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனால் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க செல்லும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மக்கள் பிரதிநிதிகளை சந்திக்கிறார். இந்த கூட்டத்தில் விருப்பமுள்ளவர்கள் அனைவரும் பங்கேற்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் வருகை குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது : திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 6ம் தேதி 25வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. பகல் 12.45 மணியளவில் நடைபெறும் விழாவை தலைமை தாங்கி நடத்தி வைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நெல்லை வருகிறார்.

அதன் பின்னர் திருநெல்வேலி வண்ணார்பேட்டை அரசினர் விருந்தினர் மாளிகைக்கு வரும் ஆளுநர் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுநல அமைப்புகளின் பிரநிதிகள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்திக்க உள்ளார்.
எனவே ஆளுநரை சந்திக்க விருப்பமுள்ளவர்கள் மாலை 6 மணி முதல் 7 மணி வரை நேரில் சந்திக்கலாம் என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். கோவையில் ஆளுநர் பன்வாரிலால் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் என்று நிர்வாக ரீதியிலான ஆலோசனை கூட்டத்தை நடத்தியதால் சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில் நெல்லையில் அனைத்து தரப்பினரையும் சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிலும் தமிழக ஆளுநர் யாரும் இதுவரை செய்திடாத நிகழ்ச்சியாக ஆளுநர் பொதுமக்களையும் சந்திக்கிறார் அதற்கு ஆட்சியரே அறிக்கை வெளியிடுகிறார் என்பது தான் குறிப்பிடும்படியான விஷயம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications