தமிழ்நாட்டில் கூடுதலாக 70 மணல் குவாரிகளை தொடங்க தமிழக அரசு முடிவு
தமிழகத்தில் கூடுதலாக 70 மணல் குவாரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
சென்னை: தமிழகத்தில் கூடுதலாக 70 மணல் குவாரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. மணல் தட்டுப்பாட்டை போக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் மணல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மணல்களின் அளவும் குறைந்து இருக்கிறது.
இதனால் இங்கு நிலவும் மணல் தட்டுப்பாடு குறித்து ஆலோசணை செய்வதற்காக தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். 8 மாவட்டத்தை சேர்ந்த ஆட்சியர்கள், 5 மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் 70 புதிய மணல் குவாரிகளை தொடங்க வேண்டும் என இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கூடுதல் மணல் குவாரி அமைக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.