ப்ளஸ் 2 தேர்வு ரிசல்ட் நாளை காலை வெளியாகிறது.. எந்தெந்த வெப்சைட்டில் பார்க்கலாம்?
சென்னை: ப்ளஸ் 2 பொது நுழைவுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1ம் தேதி வரை நடைபெற்றது. இதற்காக 2,421 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தத் தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 6,550 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் எழுதினர்.
இதே போல், 10ம் வகுப்பு பொது தேர்வு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவித்திருந்தது.

அதன்படி, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 17ம் தேதியான நாளையும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 25ம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17ம் தேதி நாளை, காலை 10.31 மணி முதல் 11 மணிக்குள் வெளியிடப்படும் என்றும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 25ம் தேதி காலை 9:31 முதல் 10 மணிக்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in.
உள்ளிட்ட இணையதளங்கள் உடனுக்குடன் மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும் என அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் டூ, மார்க் ஷீட்டை www.dge.tn.nic.in என்ற வெப்சைட்டில் இருந்து வரும் 19ம் தேதி முதல் டவுன்லோடு செய்துகொள்ள முடியும். போலவே, பள்ளிகள் அல்லது தேர்வு எழுதிய மையங்களில் இருந்தும் பெற முடியும்.
மறு கூட்டலுக்கு விரும்புவோர் நாளை மற்றும் நாளை மறுதினம் அவர்கள் பயின்ற பள்ளி வழியே விண்ணப்பிக்கலாம். தனியார் மாணவர்கள் தங்கள் தேர்வு மையங்கள் வழியே விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் வேண்டுவோர், மறு கூட்டலுக்கு இப்போது விண்ணப்பிக்க கூடாது. அவர்களுக்கு பிறகு தேதி ஒதுக்கப்படும்.












Click it and Unblock the Notifications