தமிழகத்தில் 10,11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.. ரிசல்ட்டை எப்படி பார்க்கலாம்?
சென்னை: தமிழகத்தில் 10, 11 ஆம் வகுப்புகளுக்கு நாளை தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. இந்த நிலையில் அவற்றை எப்படி பார்க்கலாம் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி நடந்த தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 7.70 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதே போல் ஏப்ரல் 6 முதல் 20ஆம் தேதி வரை நடந்த 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வை சுமார் 9.40 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

தொடர்ந்து விடைத்தாள்களை திருத்தும் பணி, மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் முடிக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று இந்த இரு தேர்வு முடிவுகளும் ஒரே நாளில் நாளை வெளியிடப்படுகிறது. இதை தேர்வு துறை அறிவித்தது.
அதன்படி 10,11 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் சென்னை டிபிஐ வளாகத்தில் நாளை வெளியிடப்பட்டன. 10ஆம் வகுப்பு முடிவுகள் காலை 10 மணிக்கும் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கும் வெளியாகும். இந்த தேர்வு முடிவுகளை இணையதளம் வாயிலாக பார்க்கலாம். இதை எப்படி பார்க்கலாம் என்பதை அறிந்து கொள்வோம்.

தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளைப் பார்த்துக் கொள்ளலாம். மாணவர்கள், தனித்தேர்வர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியாகின. அது போல் சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 12 ஆம் தேதி வெளியானது. வழக்கம் போல் இந்த தேர்வுகளில் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றிருந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications