இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் காவிரி பாய்ந்தோடும்.. தமிழிசை சௌந்தரராஜன் உறுதி
தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களில் காவிரி பாய்ந்தோட போகிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களில் காவிரி பாய்ந்தோட போகிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து இன்று தமிழகம் தழுவிய மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் காவிரி பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக தமிழக ஆளுநரை இன்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்தார். சந்திப்பு முடிந்த பின் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில் ''தமிழகத்தில் உள்ள கட்சிகள் தங்களின் சுயலாபத்திற்காக மட்டுமே தமிழகத்தில் போரட்டம் செய்கிறது. தமிழக மக்கள் நலனில் பாஜக கட்சி எப்போதும் அக்கறையுடன் இருக்கிறது. காவிரி போராட்டத்தில் நாங்கள் எப்போதும் மக்கள் பக்கம் நிற்கிறோம்'' என்றுள்ளார்.
மேலும் ''தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களில் காவிரி பாய்ந்தோட போகிறது. அதற்காக பாஜக கட்சி பாடுபடும். சில கட்சிகள் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்காது என்பது போல மாய தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். ஆனால் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் கிடைக்கும்.'' என்றும் பேசியுள்ளார்.