ஆலோசனை நடத்த அழைத்து கட்டியணைக்க முயற்சித்த ஐஜி... தமிழக பெண் எஸ்பி பகீர் புகார்!
தமிழக பெண் எஸ்பிக்கு ஒருவருக்கு ஐஜி ஒருவர் பாலியல் தொல்லை அளிப்பதாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் பெண் எஸ்பி ஒருவர் தனக்கு ஐஜி ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக டிஜிபி அலுவலகத்தில் பெண் எஸ்பி ஒருவர் தனக்கு ஐஜி ஒருவர் பாலியல் தொல்லை அளிப்பதாக அளித்த புகார் தமிழ்நாடு காவல்துறையையே அதிர வைத்துள்ளது.

பெண் எஸ்பி அளித்த புகாரின்படி, ஆறுபடை வீடுகொண்டவரின் பெயர் கொண்ட ஒரு ஐஜி தனக்கு கீழே பணி புரியும் பெண் எஸ்பியுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று தனது அலுவலகத்துக்கு அழைத்துள்ளார். உயர் அதிகாரி ஆலோசனை நடத்த அழைக்கிறார் என்பதால் ஐஜியின் அலுவலக அறைக்கு சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பெண் எஸ்பி உள்ளே சென்றதும் அந்த ஐஜி எஸ்பியை பாய்ந்து கட்டியணைக்க முயற்சி செய்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண் எஸ்பி ஐஜியை தள்ளிவிட்டுவிட்டு அழுதுகொண்டே வெளியே வந்துள்ளார். பின்னர், அவர் ஒரு வாரம் விடுமுறையில் சென்றுள்ளார்.
பெண் எஸ்பி அளித்த புகாரின்படி, ஒரு ஐஜி தனக்கு கீழே பணி புரியும் பெண் எஸ்பியுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று தனது அலுவலகத்துக்கு அழைத்துள்ளார். உயர் அதிகாரி ஆலோசனை நடத்த அழைக்கிறார் என்பதால் ஐஜியின் அலுவலக அறைக்கு சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பெண் எஸ்பி உள்ளே சென்றதும் அந்த ஐஜி எஸ்பியை பாய்ந்து கட்டியணைக்க முயற்சி செய்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண் எஸ்பி ஐஜியை தள்ளிவிட்டுவிட்டு அழுதுகொண்டே வெளியே வந்துள்ளார். பின்னர், அவர் ஒரு வாரம் விடுமுறையில் சென்றுள்ளார்.
அதன்படி, ஐஜி மீது பெண் எஸ்பி அளித்துள்ள பாலியல் புகாரை விசாரிக்க தமிழ்நாடு டிஜிபி டி.கே.ராஜேந்திரன், கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், சு.அருணாச்சலம், டிஐஜி தேன்மொழி ஆகியோரைக்கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த விசாரணைக் குழுவில், ஓய்வுபெற்ற கூடுதல் எஸ்பி சரஸ்வதி, டிஜிபி அலுவலக நிர்வாக அலுவலர் ரமேஷ் ஆகியோரும் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் பணியிடங்களில் பெண்கள் மீது பாலியல் தொல்லை தடுப்புச் சட்டப்படி விசாரிக்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் துறையில் அதிலும் ஒரு ஐஜி அதிகார எண்ணத்தில் ஒரு பெண் எஸ்பியை பாலியல் தொல்லை செய்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண் எஸ்பிக்கே இந்த நிலை என்றால் கீழ்நிலை காவலர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications