ஆலோசனை நடத்த அழைத்து கட்டியணைக்க முயற்சித்த ஐஜி... தமிழக பெண் எஸ்பி பகீர் புகார்!
தமிழக பெண் எஸ்பிக்கு ஒருவருக்கு ஐஜி ஒருவர் பாலியல் தொல்லை அளிப்பதாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் பெண் எஸ்பி ஒருவர் தனக்கு ஐஜி ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக டிஜிபி அலுவலகத்தில் பெண் எஸ்பி ஒருவர் தனக்கு ஐஜி ஒருவர் பாலியல் தொல்லை அளிப்பதாக அளித்த புகார் தமிழ்நாடு காவல்துறையையே அதிர வைத்துள்ளது.

பெண் எஸ்பி அளித்த புகாரின்படி, ஆறுபடை வீடுகொண்டவரின் பெயர் கொண்ட ஒரு ஐஜி தனக்கு கீழே பணி புரியும் பெண் எஸ்பியுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று தனது அலுவலகத்துக்கு அழைத்துள்ளார். உயர் அதிகாரி ஆலோசனை நடத்த அழைக்கிறார் என்பதால் ஐஜியின் அலுவலக அறைக்கு சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பெண் எஸ்பி உள்ளே சென்றதும் அந்த ஐஜி எஸ்பியை பாய்ந்து கட்டியணைக்க முயற்சி செய்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண் எஸ்பி ஐஜியை தள்ளிவிட்டுவிட்டு அழுதுகொண்டே வெளியே வந்துள்ளார். பின்னர், அவர் ஒரு வாரம் விடுமுறையில் சென்றுள்ளார்.
பெண் எஸ்பி அளித்த புகாரின்படி, ஒரு ஐஜி தனக்கு கீழே பணி புரியும் பெண் எஸ்பியுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று தனது அலுவலகத்துக்கு அழைத்துள்ளார். உயர் அதிகாரி ஆலோசனை நடத்த அழைக்கிறார் என்பதால் ஐஜியின் அலுவலக அறைக்கு சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பெண் எஸ்பி உள்ளே சென்றதும் அந்த ஐஜி எஸ்பியை பாய்ந்து கட்டியணைக்க முயற்சி செய்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண் எஸ்பி ஐஜியை தள்ளிவிட்டுவிட்டு அழுதுகொண்டே வெளியே வந்துள்ளார். பின்னர், அவர் ஒரு வாரம் விடுமுறையில் சென்றுள்ளார்.
அதன்படி, ஐஜி மீது பெண் எஸ்பி அளித்துள்ள பாலியல் புகாரை விசாரிக்க தமிழ்நாடு டிஜிபி டி.கே.ராஜேந்திரன், கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், சு.அருணாச்சலம், டிஐஜி தேன்மொழி ஆகியோரைக்கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த விசாரணைக் குழுவில், ஓய்வுபெற்ற கூடுதல் எஸ்பி சரஸ்வதி, டிஜிபி அலுவலக நிர்வாக அலுவலர் ரமேஷ் ஆகியோரும் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் பணியிடங்களில் பெண்கள் மீது பாலியல் தொல்லை தடுப்புச் சட்டப்படி விசாரிக்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் துறையில் அதிலும் ஒரு ஐஜி அதிகார எண்ணத்தில் ஒரு பெண் எஸ்பியை பாலியல் தொல்லை செய்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண் எஸ்பிக்கே இந்த நிலை என்றால் கீழ்நிலை காவலர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications