முதல்வர் ஓ.பி.எஸ். கூட்டிய முதலாவது சட்டசபை கூட்டத் தொடர் சில காட்சிகள்
சென்னை: தமிழகத்தின் முதல்வராக 2வது முறையாக பொறுப்பேற்ற முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முதல் முறையாக சட்டசபையை கூட்டினார். அதே நேரத்தில் 3 நாள் மட்டுமே சட்டசபையை கூட்டியிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் முதல்வராக முதல் முறையாக 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2002 மார்ச் 1-ந் தேதி வரை ஓ. பன்னீர்செல்வம் பதவி வகித்தார். அப்போது எந்த ஒரு சட்டசபைக் கூட்டத்தையும் அவர் கூட்டவில்லை.
அதன் பின்னர் கடந்த செப்டம்பரில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிக்கப்பட்ட வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2வது முறையாக மீண்டும் முதல்வராக பதவி ஏற்றுள்ளார் ஓ. பன்னீர்செல்வம்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்த நிலையில் சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடரை ஓ. பன்னீர்செல்வம் கூட்டினார். இந்தக் கூட்டத் தொடரின் சில காட்சிகள்
வந்திறங்கும் அமைச்சர்கள்..
எப்படியும் அனைத்து எதிர்க் கட்சிகளும் அடுக்கடுக்கான புகார்களை சொல்லப் போகிறது.. இதற்கு பதிலடி கொடுத்தாக வேண்டுமே என்ற சிந்தனையுடன் வந்திறங்கும் அமைச்சர்கள்
கலாய்ப்போம்ல..
நாம என்ன சொன்னாலும் இந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் லாவணி பண்ணத்தான் போறாங்க என்ற பேச்சுக்கு நடுவே.. "இதுநான் நம்ம சி.எம்" என்று நடித்துக் காட்டுகிறாரோ திமுகவின் தங்கம் தென்னரசு
நாங்களும் வருவோம்ல
சட்டசபைக்கு எம்.எல்.ஏக்கள்தான் வருவாங்களா.. அண்டா சைஸ் மோதிரம், அனகோண்டா சைஸ் பிரேஸ்லெட் போட்டுகிட்டு நாங்களும் வருவோம் என்று சொல்கிறாரோ ரத்தத்தின் ரத்தம்
பரிவாரங்கள்..
படை பரிவாரங்களுடன் போனாலும் வெளிநடப்புதானே செய்யப் போகிறோம்.. என்று யோசிக்கிறாரோ மு.க. ஸ்டாலின்