கடலில் எல்லை தாண்டுவது தமிழன் என்பதில்தான் பிரச்சினை - சீமான் குற்றச்சாட்டு
கடலில் எல்லை தாண்டுவது தொடர்பாக தமிழர்கள் மட்டுமே தாக்குதலுக்கு ஆளாகின்றனர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
ராமேஸ்வரம் : தமிழர்கள் மட்டுமே உலகம் முழுவதும் தாக்குதலுக்கு ஆளாகின்றனர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். கடலில் எல்லை தாண்டும் தமிழர்கள் மட்டுமே கைது செய்யப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து கடந்த 4 நாட்களாக தங்கச்சி மடத்தில் மீனவர்கள் போராடி வருகின்றனர். வெளியுறவுத்துறை அமைச்சர் வந்தால் மட்டுமே உடலை பெற்றுக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர்.

மீனவர்களின் போராட்டத்திற்கு பல அரசியல் கட்சித்தலைவர்களும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தங்கச்சி மடத்திற்கு சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். பிரிட்ஜோவின் பெற்றோர், உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய அவர், மீனவர்களின் போராட்டத்தில் பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடலில் எல்லை தாண்டும் மீனவர்கள் யார் என்பதில் பிரச்சினையில்லை என்றும் தமிழன் என்பதால்தான் கைது செய்யப்படுகின்றனர், சுடப்படுகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.
உலகம் முழுவதும் தமிழர்கள் மட்டுமே தாக்குதலுக்கு ஆளாவதாகவும், அதை தட்டிக்கேட்க சரியான அரசு இல்லை என்றும் சீமான் கூறினார். கடந்த சில ஆண்டுகளாக மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் சீமான் குற்றம் சாட்டினார். அதிகாரம் தங்கள் கைகளுக்கு வரும் போது தட்டிக்கேட்போம் என்றும் சீமான் தெரிவித்தார்.
சிலை கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டால் தொழிலதிபர் என்று கூறும் ஊடகங்கள், வயிற்று பிழைப்புக்காக மரம் வெட்டுபவர்களை கடத்தல்காரர்கள் என்று எழுதுவதாக குற்றம் சாட்டினார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications