தனித் தமிழ்ச் சிறுகதைப் போட்டி
புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த தனித் தமிழியக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மொத்தப் பரிசுத் தொகை ரூ. 3000 ஆகும்.
கதைகள் வந்து சேர வேண்டிய கடைசிநாள்: 31.7.2014.
முகவரி : முனைவர் க.தமிழமல்லன், தலைவர், தனித்தமிழ்இயக்கம்,
66, மாரியம்மன்கோயில் தெரு, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி - 605009
தொலைபேசி எண்: 0413-2247072
நெறிமுறைகள்:
1. அ 4 தாளில் 5 பக்கம் கொண்ட, குமுகாயக் கதைகள், பிறசொற்கள், பிற மொழிப் பெயர்கள் கலவாத நடையில் எழுதப்படல் வேண்டும்.
2. கதையின் இரண்டு படிகளை அனுப்ப வேண்டும். ஒரு படியில் மட்டும் பெயர், முகவரிகளைத் தனித் தாளில் இணைத்து அனுப்புக. கதையின் எந்தப் பக்கத்திலும் எழுதியவர் பெயர் இருக்கக் கூடாது.
3. மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா.
4. தேர்தெடுக்கப்பட்ட கதைகள்‘வெல்லும் தூய தமிழ்'மாத இதழில் வெளியிடப்படும். விருப்பம் உள்ளவர்கள் அதற்கான விலை ரூ. 20.00 இணைத்து அனுப்பவேண்டும்
5. நடுவர் தீர்ப்பே இறுதியானது .
6. சிறுகதைப் படைப்பாளர் உறுதிமொழி இணைக்க வேண்டும்
பொறிஞர் இரா.தேவதாசு இந்தாண்டு பரிசுகளை வழங்கவுள்ளார்.
இரண்டு முதற் பரிசுகள் 750.00 = 1500
இரண்டு இரண்டாம் பரிசுகள் 500.00 = 1000
இரண்டு மூன்றாம் பரிசுகள் 250.00 = 500
இத்தகவல்களைத் தனித் தமிழ் இயக்கத் தலைவர் க.தமிழமல்லன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications