காவிரி: மத்திய அரசுக்கு எதிராக 6-வது நாளாகத் தொடர் போராட்டம் - தஞ்சையில் மாணவர்கள் சாலை மறியல்
காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்திவருகின்றனர்.
Recommended Video

தஞ்சாவூர் : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து 6-வது நாளாகத் தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தஞ்சாவூர் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகளும், விவசாய அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகளும் தொடர்ந்து போராடி வருகின்றன.

நாளுக்கு நாள் மத்திய அரசுக்கான எதிர்ப்பு தமிழகத்தில் வலுத்து வருகிறது. இந்நிலையில், 6-வது நாளான இன்று தஞ்சாவூர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் சரபோஜி கல்லூரி வாசலிலும், 300கும் மேற்பட்ட மாணவர்கள் தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் மற்றும் கல்லணை கால்வாய் பகுதிகளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று முழக்கம் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவியரை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்ததை அடுத்து, மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மட்டுமல்லாது தமிழகத்தின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மதுராந்தகத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழக்கறிஞர்கள் காவிரி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications