ஆம்பூரில் வீட்டுக்குள் டேங்கர் லாரி புகுந்து ஒருவர் பலி: 3 பேர் காயம்
ஆம்பூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அதிகாலை நேரத்தில் டேங்கர் லாரி வீட்டுக்குள் புகுந்து கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
ஆம்பூர் டவுன் அண்ணாநகரை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 40) கூலி தொழிலாளி. இவரின் வீடு தேசிய நெடுஞ்சாலையை யொட்டி உள்ளது. நேற்று இரவு கருணாகரன், இவரது மனைவி முனியம்மாள் (35), மகன் வெங்கடேசன் (17), உறவினர் முரளி ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்ற டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்து. அதிகாலை 4.30 மணிக்கு டிரைவர் கட்டுபாட்டை இழந்த லாரி கருணாகரன் வீட்டின் உள்ளே புகுந்தது.
இதில் இடிபாடுகளில் சிக்கி வீட்டில் இருந்தோர் கதறினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கருணாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.
மேலும் படுகாயம் அடைந்த முனியம்மாள், வெங்கடேசன், முரளி ஆகியோர் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் டவுன் போலீசார் கருணாகரனின் பிணத்தை சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications