அதிமுகவுக்கு வாங்கு வங்கியாக மாறிய 'டாஸ்மாக் பயம்'
சென்னை: தமிழகத்தில் சுமார் 1 கோடி பேருக்கு குடிப்பழக்கம் உள்ள நிலையில் பிற கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்தி டாஸ்மாக்கிற்கு மூடுவிழா நடத்திவிடுவார்களோ என்ற பயம் அதிமுகவுக்கு கை கொடுத்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்தன. ஆனால் அதிமுகவோ படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக கூறியது.

இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
அதிமுக
அதிமுக அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. அதனால் அதிமுகவினர் தற்போதே வெற்றிக் கொண்டாட்டங்களை துவங்கிவிட்டனர்.
டாஸ்மாக்
தமிழகத்தில் சுமார் 1 கோடி பேருக்கு குடிப்பழக்கம் உள்ளது. தெருவுக்கு தெரு டாஸ்மாக்கில் குறைந்த விலையில் மது வாங்கி குடித்து பழகிவிட்ட அவர்களுக்கு வேறு கட்சிகள் ஆட்சிக்கு வந்து டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால் என்ன செய்வது என்ற பயம்.

மது
டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால் அல்லாட வேண்டும் என்ற பயமும் அதிமுகவுக்கு வாக்கு வங்கியாக மாறியுள்ளது. மேலும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற பயமும் அதிமுகவுக்கு கை கொடுத்துள்ளது.
கருத்துக்கணிப்பு
நியூஸ்7 சேனல் மற்றும் தினமலர் நாளிதழ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட மக்களில் 30 சதவீதம் பேர் மதுவிலக்கு வேண்டாம் என்று தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications