கட்டிங் போட்டாலும்.. கர்நாடக சரக்கைப் போடாதே... குடிகாரர்கள் நடத்தும் பந்த்!
சென்னை: காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசைக் கண்டித்து தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் பந்த் நடத்துகின்றனர். செவ்வாய்க்கிழமை இந்த பந்த் நடைபெறுகிறது.
பி.செல்லப் பாண்டியன் தலைமையிலான இந்த சங்கம் குடிகாரர்கள் நலனுக்காக இயங்கி வருகிறது. விதம் விதமான கோரிக்கைகளுடன் தினுசு தினுசாக போராட்டம் நடத்து இவர்களது செயல்பாடுகளில் ஒன்று.

அந்த வகையில் கர்நாடகத்தைக் கண்டித்து ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளது இந்த சங்கம். இதுதொடர்பாக அந்த சங்கம் வெளியிட்டுள்ள போஸ்டர்:
கட்டிங் போட்டாலும்.. கர்நாடக சரக்கைப் போடாதே.. 30.8.2016ல் காவிரி தண்ணீருக்காக டாஸ்மாக் மது குடிப்போர் பந்த்.
மத்திய அரசே கண்ணீரில் மிதக்கும் காவிரி பாசன விவசாயிகளுக்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக காவாலி பய கிட்ட போய் சொல்லு.. நாங்கள களமிறங்கோட்டோமுன்னு என்று போட்டுள்ளனர்.
இவர்கள் எப்படி பந்த் நடத்தப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. மது அருந்தாமல் ஒரு நாள் முழுவதும் விரதம் இருந்து பந்த் நடத்துவார்களா அல்லது கர்நாடக சரக்குகளைத் தவிர்த்து விட்டு பிற மாநில மது வகைகளைக் குடித்து பந்த் நடத்தப் போகிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை!












Click it and Unblock the Notifications