இந்த மாதம் 2 நாட்களுக்கு டாஸ்மாக்கிற்கு “ஹாலிடே” !
சென்னை: திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தினை முன்னிட்டு வரும் 16 மற்றும் 26 ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான பார்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்தியில், "வருகிற 16 ஆம் தேதி மற்றும் 26 ஆகிய தேதிகளில் முறையே திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தினை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப்புகளைச் சார்ந்த பார்கள் மற்றும் ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும்.
அன்றைய தினங்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால், மதுபான விதி முறைகளின்பழ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
இதேப்போன்று மற்ற மாவட்டங்களிலும் மேற்கூறிய தேதிகளில் டாஸ்மாக், மதுபான பார்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications