ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு
சென்னை: தமிழகத்தில் மது விற்பனை என்பது அரசின் மிக முக்கியமான வருவாய் ஆதாரமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில் மதுப்பிரியர்கள் வாங்கும் ஒரு குவார்ட்டர் பாட்டிலில் அரசுக்கு எவ்வளவு வரி செல்கிறது என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் மிகக் குறைந்த விலையாக விற்கப்படும் மது பாட்டிலின் விலை 140 ரூபாய் ஆகும். இந்த 140 ரூபாயில் மதுபானத்தை தயாரிக்கும் ஆலைகளுக்கு வெறும் 10.50 ரூபாய் மட்டுமே செல்கிறது. மீதமுள்ள தொகையில் பெரும் பகுதி வரி என்ற பெயரில் அரசுக்கே செல்கிறது என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

ஒரு குவார்ட்டர் பாட்டிலில் அரசுக்கு கிடைக்கும் வரி எவ்வளவு?
நீங்கள் 140 ரூபாய் கொடுத்து வாங்கும் ஒரு குவார்ட்டர் பாட்டிலில், மாநில அரசுக்கு வரியாக மட்டும் 128.50 ரூபாய் செல்கிறது. அதாவது விற்பனை விலையில் சுமார் 90 சதவீதத்திற்கும் மேல் வரியாகவே வசூலிக்கப்படுகிறது. மதுபான ஆலைகளுக்கு 10.50 ரூபாயும், டாஸ்மாக் நிறுவனத்திற்கு லாபமாக 1.50 ரூபாயும் மட்டுமே கிடைக்கிறது.
இதே கணக்கீட்டின்படி பார்த்தால், 290 ரூபாய் மதிப்புள்ள ஒரு குவார்ட்டர் பாட்டிலுக்கு வரி இன்னும் கூடுதலாக இருக்கும். பிரீமியம் ரக மதுபானங்களை பொறுத்தவரை, அதன் தயாரிப்பு செலவு சற்று அதிகமாக இருந்தாலும், அரசு விதிக்கும் கலால் வரி மற்றும் கூடுதல் வரி காரணமாக அதன் விலை பல மடங்கு உயர்கிறது.
தினசரி 100 கோடி ரூபாய் விற்பனை என்றால் அரசுக்கு லாபம் எவ்வளவு?
தமிழகத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனை நடைபெறுகிறது. விசேஷ நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் இந்த வசூல் 150 கோடி ரூபாயை கூட தாண்டுகிறது. ஒரு நாளைக்கு 100 கோடி ரூபாய் விற்பனை நடந்தால், அதில் சுமார் 85 முதல் 90 கோடி ரூபாய் வரை அரசுக்கு வரியாகவே கிடைக்கிறது.
மது பாட்டில் விலை ரூ. 140 (குவார்ட்டர்) அரசு வரி ரூ. 128.50, ஆலைகளுக்கு செல்லும் தொகை ரூ. 10.50 ,
ரூ. 290 (பிரீமியம் மது விலை) மதிப்புள்ள மதுபாட்டிலுக்கு, அரசுக்கு செல்லும் வரி ரூ. 265.00 (தோராயமாக), ஆலைகளுக்கு செல்லும் தொகை ரூ. 22.00, மீதமுள்ள தொகை தான் டாஸ்மாக் கடைக்கு போகிறது.
தமிழகத்தில் தற்போது மதுக்கடைகளை குறைக்கும் நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. முதல்வர் உத்தரவின்படி, கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு அருகில் இருந்த 525 கடைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள 192 கடைகளை மூடும் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும், வரி விகிதம் இவ்வளவு அதிகமாக இருப்பது மதுப்பிரியர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பாட்டிலின் அடக்க விலையை விட அதன் வரி பல மடங்கு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள்














Click it and Unblock the Notifications