500 டாஸ்மாக் கடைகள் மூடல் .. 5000 ஊழியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியில்!
நெல்லை: தமிழகத்தில் மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் 5 ஆயிரம் ஊழியர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஜூன் 25ம் தேதியில் முதல் கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளை அடைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த கடைகளில் வேலை பார்த்த மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவியாளர்கள் உள்பட சுமார் 2500 பேர் வேலை இழந்தனர். இவர்களில் சிலர் அருகில் உள்ள கடைகளில் கூடுதலாக நியமிக்கப்பட்டனர்.

ஆனால் பெரும்பாலானோர் எந்த கடைக்கும் வேலைக்கு செல்லாமல் மாதந்தோறும் டாஸ்மாக் மண்டல அலுவலகத்தில் கையெழுத்திட்டு சம்பளம் மட்டும் பெற்று வந்தனர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் 168 பார்கள் மூடப்படும் என்றும் தெரிவித்தரர்.
இதன் கீழ் நெல்லை மாவட்டத்தில் 20 கடைகள் மூடப்பட்டுள்ளன. இதில் பணிபுரிந்த 120 ஊழியர்களின் நிலை என்னவாகும் என்று தெரியாமல் திகைப்பில் உள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதும் 1000 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அதில் பணிபுரிந்த 5000 பேர் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
இவர்கள் அச்சு துறையில் மாற்று பணி வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் அங்கோ அரசு தேர்வை எழுதி விட்டு ஏராளமானோர் அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். இதனால் அரசுக்கு வீண் பிரச்சனை ஏற்படும் என்று தெரிகிறது. இதை சமாளிக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா என்பதும் தெரியவில்லை.
-
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications