”என் சாவுக்கு யாரும் காரணமல்ல” – கடிதம் எழுதி வைத்து விட்டு டாஸ்மாக் ஊழியர் மனைவி தற்கொலை
இடைப்பாடி: சேலத்தில் டாஸ்மாக் சூப்பர்வைஸர் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சாவுக்கு முன்பு அவர் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றிய போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இளம்பிள்ளை பகுதியில் உள்ள அரசு மதுபான கழகத்திற்கு சொந்தமான டாஸ்மாக் கடையின் சூப்பர்வைஸராக இருப்பவர் ராஜா .
திருமணமாகி எட்டு வருடங்கள்:
இவரது மனைவி புவனேஸ்வரி 28. இவர்களுக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு மனோஜ், துர்கேஷ் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
பூட்டியிருந்த வீடு:
இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜா வேலைக்கு சென்று விட்டு மதியம் சாப்பாட்டிற்காக வீட்டிற்கு திரும்பினார். வீடு உள்தாழிட்டு பூட்டியிருந்தது. பலமுறை கதவை தட்டிய ராஜா பின்னர் கதவை உடைத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்தார்.
தூக்குப் போட்டு தற்கொலை:
அப்போது அவரது மனைவி புவனேஸ்வரி தன்னுடைய சுடிதாரின் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இறந்து கிடந்தார்.
போலீசார் விசாரணை:
அதிர்ச்சியடைந்த ராஜா மகுடஞ்சாவடி போலீஸில் புகார் கொடுத்தார்.
புவனேஸ்வரி உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாவுக்கு யாரும் காரணமல்ல:
மேலும் புவனேஸ்வரி தூக்கிட்டு இறக்கும் முன்பாக கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் "என் மகன்கள் இரண்டு பேரையும் டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும். வீட்டின் அருகில் உள்ள இருவருக்கு கடன் கொடுத்துள்ளேன். அதனை வசூல் செய்து கொள்ளவும். மேலும் என் சாவுக்கு யாரும் காரணமல்ல" என எழுதி வைத்துள்ளார்.
கடிதத்தை கைப்பற்றிய போலீஸ்:
புவனேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து தற்கொலை வழக்கு பதிவு செய்த மகுடஞ்சாவடி போலீஸார் புவனேஸ்வரி எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications