காஞ்சிபுரத்துக்கு படையெடுக்கும் "குடிமக்கள்".. கும்பிடுவதற்கு அல்ல.. குடிக்க!
சென்னை: ஆர்.கே.நகர் தேர்தல் வந்தாலும் வந்தது சென்னை, திருவள்ளூர் மாவட்ட குடிகாரர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இரு மாவட்டங்களிலும் இடைத் தேர்தலையொட்டி மதுக் கடைகள் மூடப்பட்டு விட்டன. இதனால் அருகாமையில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இவர்கள் படையெடுத்து வருகின்றனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இங்கு நேற்று மாலை 5 மணிக்கு இந்த 2 மாவட்டங்களிலும் மதுக்கடைகள் மூடப்பட்டன. இனி 28 ம் தேதி காலை 10 மணிக்குதான் திறக்கப்படும்.

போட்டி போடும் குடிமகன்கள்:
இதனால் நேற்று மாலையில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள மதுக்கடைகளில் கூட்டம் அலை மோதியது. குடிமகன்கள் பலர் போட்டி போட்டுக் கொண்டு மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
கொடுமைடா:
பலர் பெட்டி பெட்டியாகவும், சிலர் முடிந்தவரை கைகளில் பிடித்துக் கொண்டும், சிலரோ, கைகளில் இடம் இல்லாமல் வாயில் வைத்து நாய் போல கவ்வியபடியும் போனதைப் பார்க்க முடிந்தது.
கடைகள் செயல்படும்:
அதேசமயம், அருகில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடைகள் வழக்கம் போல திறந்துள்ளன. இதனால் இங்குள்ள கடைகளுக்கு மக்கள் படையெடுக்கிறார்கள்.
குவியும் குடிமகன்கள்:
கிண்டியைத் தாண்டியதுமே காஞ்சிபுரம் மாவட்டம்தான். எனவே ரொம்ப தூரம் போக வேண்டிய அவசியம் இல்லாததால் குடிமகன்கள் இந்தக் கடைகளில் குவிந்து வருகிறார்கள்.
ஹையோ பாவம்:
தென் சென்னை குடிகாரர்களுக்குப் பிரச்சினை இல்லை. கொஞ்ச தூரத்திலேயே கடைகள் வந்து விடும். ஆனால் வட சென்னையின் கடைக் கோடியில் இருப்பவர்களுக்குத்தான் பெரும் சிரமமாக உள்ளது.
-
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
திருச்சி தனியார் மதுக்கடைகளில் டாஸ்மாக் 10 ரூபாய் ஸ்டிக்கர்? துணை சபாநாயகர் ஆய்வில் ட்விஸ்ட் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications