சிதம்பரம் நடராசர் ஆலயத்தை அரசே நடத்த தனிச்சட்டம் கொண்டு வருக: ததேபொக வலியுறுத்தல்
சென்னை: தமிழக அரசு தில்லை நடராசர் ஆலய நிர்வாகத்தை ஏற்று நடத்தும் வகையில் உடனடியாக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக தேசிய பொது உடமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தில்லை நடராசர் ஆலயத்தின் நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்றுநடத்தியது செல்லாது என உச்சநீதி மன்றம் இன்று (06.01.2014) அளித்துள்ள தீர்ப்பு முற்றிலும் எதிர்பாராத ஒன்று அல்ல என்ற போதிலும். தமிழர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் தீர்ப்பாகும்.
கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழக அரசு சிதம்பரம் நடராசர் ஆலயத்தை தனது இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அதற்கான நிர்வாக அலுவரையும் நியமித்தது. இதனை எதிர்த்து சிதம்பரம் தீட்சிதர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து தமிழக அரசின் நிர்வாகம் தொடர ஆணையிட்டது.
இத்தீர்ப்பை எதிர்த்து தீட்சிதர்களும் சுப்ரமணியம் சாமியும் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தமிழக அரசு இதனை உரிய முறையில் கையாள அக்கறைக் காட்டவில்லை மூத்த வழக்கறிஞர்கள் யாரையும் நியமித்து வாதாட முன்வரவில்லை. ஏனோதானோ என்று நடத்தி வேண்டும் என்றே இந்த வழக்கை குழப்பியதோ என்று ஐயப்பட அடிப்படைகள் உண்டு.

இந்நிலையில் உச்சநீதி மன்ற நீதிபதிகள் பி.எஸ்.சவுக்கான், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் தமிழக அரசின் ஆணையைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளனர். கோயிலில் முறைகேடுகள் நடந்திருந்தால். அது குறித்து தமிழக அரசு விசாரிக்கலாமே தவிர நிர்வாக அலுவலரை நிரந்தரமாக நியமிக்க முடியாது. என்று நீதிபதிகள் கூறியிருப்பது இந்த வழக்கின் அடிப்படையையே அணுகாத தீர்ப்பாக உள்ளது.
வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் தீட்சிதர்கள் தனிவகையறாவினர் (Denomination) அல்லர் என்பதையோ, இக்கோயில் கட்டப்பட்டதிலிருந்து பல கட்டங்களில் விரிவாக்கப்பட்டது வரை அரசுகளின் பணியாக இருந்தனவே தவிர இவற்றில் தில்லை தீட்சிதர்களின் பங்கு பணி எதுவும் இல்லை என்ற உண்மையையோ உச்ச நீதி மன்றம் கருத்தில் கொள்ளவில்லை.
அந்த அடிப்படையில் உச்ச நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு வழக்கின் முதன்மை சிக்கலை கருதிப்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளது. இந்த உண்மையை முன்வைத்து தமிழக அரசு வலுவாக வாதாடாமல் போனது. இந்நிலை வருவதற்கு ஓர் முக்கிய காரணமாக அமைந்து விட்டது.
இத்தீர்ப்பை சட்ட முறையில் எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசு சிதம்பரம் நடராசர் ஆலயத்தை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொணர்வதற்கு தனிச்சட்டம் வரைந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதே ஒரே வழி.
எனவே தமிழக அரசு தில்லை நடராசர் ஆலய நிர்வாகத்தை ஏற்று நடத்தும் வகையில் உடனடியாக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்றும் சட்டமன்ற கூட்டத்தொடருக்கு காலதாமதம் ஆகுமானால் உடனடியாக அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றுத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications