சென்னிமலை: நாட்டுக்கோழி பிரியாணி, வறுவலுடன் மாணவர்களுக்கு கறிவிருந்து கொடுத்து அசத்திய ஆசிரியர்கள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு நாட்டுக்கோழி விருந்து படைத்து ஆசிரியர்கள் அசத்தியுள்ளனர்.
Recommended Video

சென்னிமலை: மூக்கை துளைக்கும் நாட்டுக்கோழி பிரியாணி, மொறு மொறு கோழி வறுவல், அவித்த முட்டை என ஒவ்வொன்றையும் தலைவாழையில் சுடச்சுட பரிமாற அதனை பள்ளி மாணவர்கள் மனமகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடன் சாப்பிட்டனர்.
தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப்பள்ளிகளில், நேற்றுடன் வகுப்பு முடிவுக்கு வந்தது. இறுதி நாளினை நேற்று, பல பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடினர்.

அதன் ஒருபகுதியாக, ஈரோடு மாவட்டம் சென்னிமலை யூனியன், பசுவபட்டி அரசு தொடக்கப்பள்ளி மாணவ - மாணவியரும் தங்களது இறுதி நாளை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களுடன் கொண்டாடினர். அப்போது மாணவர்களுக்கு கறிவிருந்து நடத்தப்பட்டது.
இதில், மணக்க மணக்க நாட்டுக்கோழி பிரியாணி, கோழி வறுவல், முட்டை என வாழை இலையில் கண்டதும் மாணவர்கள் திக்குமுக்காடி போய்விட்டனர். மகிழ்ச்சியில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டும், ஆர்வத்துடனும் சாப்பிட்டனர்.
இதற்காக கோழிகள், இலைகள் போன்றவற்றினை அந்த ஊர் இளைஞர்கள் இலவசமாக வழங்கியது சுவாரஸ்யமான தகவல். ஆனால் அதை விட கூடுதல் சுவாரஸ்யம், இந்த விருந்தினை ஆசிரியர்களே தங்கள் கைகளால் சமைத்து பரிமாரியதுதான்.
இதுகுறித்து பேசிய ஆசிரியர்கள், அரசு பள்ளிகளுக்கு ஏழை குழந்தைகள்தான் வந்து படிக்கின்றனர். அவர்களுக்கு எங்களுடைய அன்பினை வெளிப்படுத்தவே கடைசி நாளில் இந்த விருந்து உபசரிப்பு செய்ய நினைத்தோம். கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி பிரியாணியும் வறுவலும்தான் அதிகபட்ச அசைவவிருந்தாக கருதப்படுகிறது. எனவேதான் அதனை தேர்வு செய்து இறுதி நாளில் அசத்தினோம் என்றனர்.
பேராசிரியை நிர்மலாதேவி செயலால் கல்விதுறை மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து வரும் இந்நேரத்தில், பள்ளி மாணவர்களின்மேல் சென்னிமலை ஆசிரியர்கள் காட்டிய கரிசனமும், உபசரிப்பும் உண்மையிலேயே நெகிழ வைக்கிறது. ஆசிரியர்களின் இந்த உயர்ந்த சிந்தனையும் சீரிய முயற்சியும் கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல் நகர்ப்புறங்களுக்கும் பரவினால் ஆசிரியர்களின் மேல் அன்பு கூடுவதுடன், அரசு பள்ளிகளின் மேல் அனைவருக்கும் மரியாதை தானாக வந்து சேரும்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications