+ 2 விடைத்தாள் திருத்தம்: விரும்பும் மையம் தராவிட்டால் புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு!
நெல்லை: விரும்பும் மையத்தை தேர்வு துறை அனுமதிக்காவிட்டால் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு செய்திருப்பதால் அரசு அதிர்ச்சியில் உள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ்டூ தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்குகிறது. தேர்வு முடிந்வுடன் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி தொடங்கி விடும். முதல் கட்டமாக மொழி தாள் திருத்தப்டும்.
பின்பு அடுத்த கட்டமாக பிற மொழி தாள்கள் திருத்தப்படும். இதற்காக தேர்வு துறையின் சார்பில் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கலவி அலுவலர்கள் முகாம் அலுவலர்களாக நியமனம் செய்யப்படுவர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதங்களில் பிளஸ்டூ விடைத்தாள் பணிகள் மாவட்ட வாரியாக நடந்தது. நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி கல்வி மாவட்ட மையம் நெல்லையிலும், தென்காசி கல்வி மாவட்ட மையம் தென்காசியிலும் அமைக்கப்பட்டது.
தென்காசி கல்வி மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை ஆசிரியர்கள் பெரும்பாலானோர் நெல்லையில் இருந்து தினமும் சென்று வருகின்றனர். இவர்கள் தினமும் 4 மணி நேரம் பேரூந்து பயணம் செய்வதால் டயர்டாகி விடுவதாக கூறப்படுகிறது.
இதனால் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணியை தங்கள் விரும்பும் மையத்தை தேர்வு செய்ய அரசு தேர்வு துறை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி முதன்மை கல்வி அலுவலகம் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் நெல்லவை, சேரன்மகாதேவி, தென்காசி என கல்வி மாவட்டம் வாரியாக மையம் அமைக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் தஙகள் விரும்பும் மையம் கிடைக்காவிட்டால் விடைத்தாள் திருத்த செல்ல போவதில்லை என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களின் இந்த முடிவால் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications