+ 2 விடைத்தாள் திருத்தம்: விரும்பும் மையம் தராவிட்டால் புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு!
நெல்லை: விரும்பும் மையத்தை தேர்வு துறை அனுமதிக்காவிட்டால் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு செய்திருப்பதால் அரசு அதிர்ச்சியில் உள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ்டூ தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்குகிறது. தேர்வு முடிந்வுடன் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி தொடங்கி விடும். முதல் கட்டமாக மொழி தாள் திருத்தப்டும்.
பின்பு அடுத்த கட்டமாக பிற மொழி தாள்கள் திருத்தப்படும். இதற்காக தேர்வு துறையின் சார்பில் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கலவி அலுவலர்கள் முகாம் அலுவலர்களாக நியமனம் செய்யப்படுவர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதங்களில் பிளஸ்டூ விடைத்தாள் பணிகள் மாவட்ட வாரியாக நடந்தது. நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி கல்வி மாவட்ட மையம் நெல்லையிலும், தென்காசி கல்வி மாவட்ட மையம் தென்காசியிலும் அமைக்கப்பட்டது.
தென்காசி கல்வி மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை ஆசிரியர்கள் பெரும்பாலானோர் நெல்லையில் இருந்து தினமும் சென்று வருகின்றனர். இவர்கள் தினமும் 4 மணி நேரம் பேரூந்து பயணம் செய்வதால் டயர்டாகி விடுவதாக கூறப்படுகிறது.
இதனால் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணியை தங்கள் விரும்பும் மையத்தை தேர்வு செய்ய அரசு தேர்வு துறை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி முதன்மை கல்வி அலுவலகம் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் நெல்லவை, சேரன்மகாதேவி, தென்காசி என கல்வி மாவட்டம் வாரியாக மையம் அமைக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் தஙகள் விரும்பும் மையம் கிடைக்காவிட்டால் விடைத்தாள் திருத்த செல்ல போவதில்லை என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களின் இந்த முடிவால் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications