+ 2 விடைத்தாள் திருத்தம்: விரும்பும் மையம் தராவிட்டால் புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு!
நெல்லை: விரும்பும் மையத்தை தேர்வு துறை அனுமதிக்காவிட்டால் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு செய்திருப்பதால் அரசு அதிர்ச்சியில் உள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ்டூ தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்குகிறது. தேர்வு முடிந்வுடன் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி தொடங்கி விடும். முதல் கட்டமாக மொழி தாள் திருத்தப்டும்.
பின்பு அடுத்த கட்டமாக பிற மொழி தாள்கள் திருத்தப்படும். இதற்காக தேர்வு துறையின் சார்பில் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கலவி அலுவலர்கள் முகாம் அலுவலர்களாக நியமனம் செய்யப்படுவர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதங்களில் பிளஸ்டூ விடைத்தாள் பணிகள் மாவட்ட வாரியாக நடந்தது. நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி கல்வி மாவட்ட மையம் நெல்லையிலும், தென்காசி கல்வி மாவட்ட மையம் தென்காசியிலும் அமைக்கப்பட்டது.
தென்காசி கல்வி மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை ஆசிரியர்கள் பெரும்பாலானோர் நெல்லையில் இருந்து தினமும் சென்று வருகின்றனர். இவர்கள் தினமும் 4 மணி நேரம் பேரூந்து பயணம் செய்வதால் டயர்டாகி விடுவதாக கூறப்படுகிறது.
இதனால் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணியை தங்கள் விரும்பும் மையத்தை தேர்வு செய்ய அரசு தேர்வு துறை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி முதன்மை கல்வி அலுவலகம் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் நெல்லவை, சேரன்மகாதேவி, தென்காசி என கல்வி மாவட்டம் வாரியாக மையம் அமைக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் தஙகள் விரும்பும் மையம் கிடைக்காவிட்டால் விடைத்தாள் திருத்த செல்ல போவதில்லை என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களின் இந்த முடிவால் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications