''எனக்கு ஒரு சீல எடுத்துக் கொடுங்க அப்பு''.. ஆய்வுக்கு சென்ற கலெக்டரிடம் மூதாட்டி வைத்த டிமாண்ட்!
கள ஆய்வில் தீவிரம் காட்டும் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன்.
தென்காசி: தென்காசி மாவட்டம் உடையம்புளி கிராமத்தில் ஆய்வுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரனிடம், தனக்கு ஒரு சேலை எடுத்துக் கொடுக்குமாறு உரிமையாக கோரிக்கை விடுத்தார் அங்கிருந்த மூதாட்டி ஒருவர்.
அதற்கென்ன எடுத்துக் கொடுத்தால் போச்சு என்றவாறு தனது பர்ஸில் இருந்து சொந்தப் பணத்தை எடுத்து அந்த மூதாட்டிக்கு கொடுத்து உதவியிருக்கிறார் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன்.
தென்காசி மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்றுள்ள துரை ரவிச்சந்திரன் வெறுமனே ஏசி ரூமில் அமர்ந்துகொண்டு கோப்புகளை மட்டும் பார்த்துக் கொண்டிருக்காமல் கள ஆய்வில் கலக்கி வருகிறார்.

தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சியராக புதிதாக பதவியேற்றுள்ள துரை ரவிச்சந்திரனின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் மக்களை கவரும் வகையில் அமைந்திருக்கின்றன. இவர் பதவியேற்ற அன்றே விவசாயிகளின் பிரச்சனைகளையும், குறைகளையும் தீர்க்க முன்னுரிமை அளிப்பேன் என்று உறுதியளித்ததுடன் பொதுமக்கள் எந்த நேரமும் தன்னை சந்திக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார். பதவியேற்கும் போது எல்லோரும் சொல்வது தானே என்று நினைத்தவர்களுக்கு தனது செயல்பாடுகளால் சொல்லை மெய்யாக்கியுள்ளார்.

சேலை எடுத்துக் கொடுங்க
இதனிடையே தென்காசி மாவட்டம் உடையம்புளி கிராமத்தில் நேற்று ஆய்வுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரனை மறித்த மூதாட்டி ஒருவர், ''எனக்கு ஒரு சீல எடுத்துக் கொடுங்க'' என உரிமையாக கேட்டார். இதனை பார்த்த கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் ஒரு நொடி திகைத்துப் போனார்கள். என்ன இந்தம்மா கலெக்டரையே சேலை எடுத்துக் கொடுக்கச் சொல்லுது என அவர்களுக்குள் முணுமுணுக்கவும் செய்தார்கள்.

ஆட்சியர் ரவிச்சந்திரன்
ஆனால் மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரனோ, மூதாட்டி யதார்த்தமாக கேட்பதை உணர்ந்து அவருக்கு தனது பர்சிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து உதவினார். நீங்க நல்லாயிருக்கணும்யா என ஆட்சியரை அந்த மூதாடி மனமார வாழ்த்தினார். இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் வீடு கட்டும் திட்டம் குறித்து முறையிட்ட மூதாட்டி, தனக்கு அதிலுள்ள சில நடைமுறைகள் புரியவில்லை எனக் கூறியிருக்கிறார். உடனே எங்கே வி.ஏ.ஒ. இங்கே வாங்க இந்தம்மாவுக்கு தேவைப்படும் உதவிகளை செய்துக் கொடுங்க என ஆன் தி ஸ்பாட்டில் உத்தரவிட்டார்.

இயற்கை எழில் கொஞ்சும்
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை கிராமங்கள் அதிகம் அடங்கிய இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டமாகும். இந்த மாவட்டத்திற்கு ஆட்சியராக வந்துள்ள ரவிச்சந்திரன் தினமும் ஒரு பகுதிக்கு கள ஆய்வு நடத்த புறப்பட்டுவிடுகிறார். அதிகாரிகள் கள ஆய்வில் ஈடுபடுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தி வரும் வேளையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்ற ஒரு வாரத்திற்குள் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications