தென்காசி வில்லங்கம்... குளத்திற்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்..? பூங்கோதை ஆலடி அருணா பகீர் புகார்
தென்காசி: தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் குளத்திற்குள் கட்டப்படுவதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
குறிப்பிட்ட சிலரின் ஆதாயத்துக்காக விளைநிலங்கள், குளங்கள் உள்ள பகுதியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்படுவதாக அவர் கூறியிருக்கிறார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விவகாரத்தில் தொடர்ந்து களத்திலும், சட்டரீதியாகவும் போராட்டம் நடத்த உள்ளதாக பூங்கோதை தெரிவித்துள்ளார்.

இயற்கை எழில்
மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியான தென்காசி, கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த மாவட்டத்தில் திரும்பும் திசையெல்லாம் பச்சை வண்ணம் படர்ந்த வயல்களை காண முடியும். ரம்மியமான தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் நீர் வீழ்ச்சி உள்ளதால் இங்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.

ஆட்சியர் அலுவலகம்
தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டும் இன்னும் அங்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்படவில்லை. இந்நிலையில் அண்மையில் ரூ.119 கோடி நிதி ஒதுக்கிய அரசு தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட ஆயிரப்பேரி என்ற இடத்தை தேர்வு செய்து அங்கு முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளது. இதற்கு முன்னாள் அமைச்சரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான பூங்கோதை ஆலடி அருணா கடும் எதிர்ப்பு தெரிவிப்பதோடு அதற்கான பகீர் காரணத்தையும் தெரிவித்துள்ளார்.

குளங்கள்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்காக ஆயிரப் பேரியில் தேர்வு செய்யப்பட்ட 28 ஏக்கரில் பெரிய குளம், கண்டுகொண்டான் மாணிக்ககுளம் ஆகிய இரண்டு குளங்கள் உள்ளதாகவும் இந்த குளத்திற்கு வரக்கூடிய நீர்வழித்தடத்தை அடைத்து கட்டுமானப் பணிகளை தொடங்குவதில் அரசு அவசரம் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தென்காசியில் இருந்து ஆயிரப்பேரிக்கு வரும் சாலையில் பல நூறு ஏக்கர் விளைநிலங்கள் உள்ளதாகவும் அதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சட்டரீதியாக
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக விவகாரத்தில் சட்டரீதியாகவும், களத்திலும் தனது போராட்டங்கள் தொடரும் என கூறும் பூங்கோதை ஆலடி அருணா, புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க தென்காசி நகரத்திலேயே 10-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளதாக பட்டியலிடுகிறார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications