மக்கள் மாறுவார்களா.. செக்கு மாடு மாதிரி இருப்பார்களா.. ஆர்.கே.நகர் குறித்து தா.பா. கருத்து
சென்னை: மத்தியில் உள்ள ஆளும் பாஜகவின் திட்டப்படி, விருப்பப்படி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் மத்தியில் ஆளும் பாஜகவின் விருப்பப்படி எல்லாம் நடந்து வருகிறது. அந்தவகையில் இப்போது இடைத் தேர்தலை அறிவித்துள்ளனர். மக்களின் கருத்தைத் தெரிந்து கொள்ளவும் இது உதவும். மக்களை சந்திப்போம்.

மத்தியில் ஆளும் கட்சி பாஜக என்பதால் அனைத்து விதமான அதிகார துஷ்பிரயோகத்தையும் எதிர்பார்க்கலாம். அதையெல்லாம் நம்மால் தடுக்க முடியுமா என்பதை மக்களைத் திரட்டித்தான் பார்க்க முடியும்.
தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள அரசியல் சட்டத்தையே கூட கடலில் தூக்கி எறியத் தயங்காதது இந்த மத்திய அரசு.
மக்கள் மனதில் மாற்றம் இருக்கும், இருக்க வேண்டும் என நம்புகிறேன். காலம் வாய்ப்புகளைக் கொடுக்கிறது. மக்கள் பழையசெக்கு மாடு மாதிரி இருக்கப் போகிறார்களா அல்லது மாற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார் தா.பாண்டியன்.












Click it and Unblock the Notifications