அதிமுகவுடன் கூட்டணிக்காக ரகசிய பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை: தா. பாண்டியன் திட்டவட்டம்
சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காக தாம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான செய்திகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் மறுத்துள்ளார்.
மதிமுக, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை இணைந்து மக்கள் நலக் கூட்டியக்கத்தை முதலில் உருவாக்கின. பின்னர் சட்டசபை தேர்தலுக்காக இது மக்கள் நலக் கூட்டணியாக மாறியது.

ஆனால் மக்கள் நலக் கூட்டணியாக மாற்றியதை தொடக்கத்திலேயே எதிர்த்தவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன். அதிமுகவின் ஆதரவாளராக அறியப்பட்டவர் தா.பா. ஆகையால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க அவர் விரும்புவதாகவும் கூறப்பட்டது.
இருப்பினும் மக்கள் நலக் கூட்டணி உதயமாக தேர்தல் களத்தில் பிரசாரங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியேறி அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்றும் இதற்கான பேச்சுவார்த்தையை தா. பாண்டியன் ரகசியமாக நடத்துவதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனால் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தா. பாண்டியன் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். செய்தியாளர்களிடம் தா. பாண்டியன் கூறியதாவது:
லோக்சபா தேர்தலின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மேலிடத் தலைவர்கள் வெளிப்படையாக ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். அதன் பின்னர் எங்களுடன் கூட்டணி வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கட்சியிடம் தெரிவித்தது அதிமுக. அது எங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
ஆக லோக்சபா தேர்தலின் போது எங்களுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது அதிமுகதான். அந்த தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவுடன் ஒட்டுப்போடும் வேலையை, பேச்சுவார்த்தையை நானோ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள எவருமே செய்யவில்லை. அதிமுகவுடன் கூட்டணி அமைக்க ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தவும் இல்லை.
தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதற்கேற்ப மக்கள் நலக் கூட்டணி உருவானது. அப்படி மாற்றம் தேவை என எண்ணுகிற கட்சிகள் மக்கள் நலக் கூட்டணியில் இணையம். மக்கள் நலக் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு நாங்கள் உரிய மரியாதை தருவோம்.
இவ்வாறு தா. பாண்டியன் கூறினார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications