தூத்துக்குடி பிரத்தியங்கரா தேவி சித்தர் பீடத்தில் தை மகாளய அமாவாசை யாகம்
தூத்துக்குடி:தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் தை மகாளய அமாவாசையை முன்னிட்டு மகாலெட்சுமி யாகம் நடந்தது.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகேயுள்ள அய்யனடைப்பு சித்தர்நகரில் தமிழகத்திலேயே மிக உயரமாக 11அடி உயரத்தில் ஒரே கல்லால் ஆன பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் மற்றும் குருபகவான், வீரபத்திரர், தட்சிணாமூர்த்திக்கு தனிசந்நிதி நிறுவப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகிறது.

தை மகாளய அமாவாசையை முன்னிட்டு உலகஅமைதிவேண்டியும், நன்கு மழைபெய்து பசுமைவளம் சிறக்க வேண்டியும், அனைத்து மக்களும் நலமாக வாழவேண்டியும் ஆலயத்தில் இன்று மகாலெட்சுமி யாகம் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலமாக நடந்தது.

யாக வழிபாடுகளை தொடர்ந்து காலபைரவர்-பிரத்தியங்கிராதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 16வகையான அபிஷேக ஆராதனைகளுடன் கூடிய வழிபாடுகள் நடந்தது. வழிபாடுகளைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

யாக வழிபாட்டில் மலேசிய பக்தர் டத்தோ செந்திநாதன், அறக்கட்டளையினர் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் அறக்கட்டளையினர், ஆலய நிர்வாகிகள், மகளிரணியினர் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.












Click it and Unblock the Notifications