தையூர், மதுராந்தகம் ஏரிகள் உடையவில்லை, யாரும் அச்சப்பட வேண்டாம்: அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தையூர் மற்றும் மதுராந்தகம் ஏரிகள் உடைந்துவிட்டதாக பரவிய வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

அவ்வப்போது பெய்து வரும் கனமழையால் சென்னை தவிர்த்து கடலூர், காஞ்சிபுரம், புதுச்சேரி மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே தங்கள் பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ள கவலையில் இருக்கும் மக்களை சில விஷமிகள் சோதித்து பார்க்கின்றனர்.

Thaiyur, Maduranthakam lakes are safe: Officials

கடந்த சில நாட்களுக்கு முன்பு செம்பரபாக்கம் ஏரி உடைந்துவிட்டதாக வதந்தி பரவியது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தையூர் ஏரி மற்றும் மதுராந்தகம் ஏரி ஆகியவை உடைந்துவிட்டதாக தற்போது வதந்தி தீயாக பரவி மக்களை கவலை அடைய வைத்துள்ளது.

தையூர், மதுராந்தகம் ஏரிகள் உடைந்தது என்ற தகவலில் உண்மை இல்லை. அதனால் அதை நினைத்து மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், பொதுப் பணித்துறை அதிகாரிகள் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களை அவ்வப்போது இது போன்ற வதந்திகள் நோகடிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+